என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சந்திரனும் - உடல் நோயும்
Byமாலை மலர்12 March 2018 2:50 AM GMT (Updated: 12 March 2018 2:50 AM GMT)
சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் நட்பு, சமம் ஆக இருந்தால், அந்த ஜாதகர் திடமான மனப் போக்கும், நோய்களுக்கு இடம் கொடுக்காதவராகவும் இருப்பார்.
* சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் நட்பு, சமம் ஆக இருந்தால், அந்த ஜாதகர் திடமான மனப் போக்கும், நோய்களுக்கு இடம் கொடுக்காதவராகவும் இருப்பார்.
* சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும், எதிரியாக இருந்தால் அவ்வப்போது தொற்று நோய்கள் வந்து கொண்டே இருக்கும்.
* சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதி, சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதி இருவருமோ அல்லது இவர்களில் ஒருவரோ நீச்ச தன்மை பெற்று இருந்தால், அந்த ஜாதகரையும் நோயையும் பிரிக்க முடியாது. அவரின் இறுதிகாலம் வரை நோய் இருந்து கொண்டே இருக்கும்.
* சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் ஒன்றாக இருப்பது. அதாவது உத்திரம் 1-ம் பாதம் மற்றும் பூரட்டாதி 4-ம் பாதம் ஆகிய இரண்டு நட்சத்திரத்தில் சந்திரன் நிற்கும் போது, ராசி அதிபதியும், நட்சத்திர அதி பதியும் ஒருவராக இருக்கிறார்கள். இந்த இரண்டு நட்சத்திரத்திலும் சந்திரன் நின்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் இருக்கும்.
* குரு, புதன், சுக்ரன் ஆகியோர் ஆட்சி செய்யும் ராசிகளில் சந்திரன் நின்றால், அந்த ஜாதகருக்கு வம்சா வழி நோய்கள் வராது.
* சூரியன், செவ்வாய் ஆகியோரது ஆட்சிக்குரிய ராசிகளில், சந்திரன் நின்றால் அந்த ஜாதகருக்கு புதிய புதிய நோய்கள் வந்து போகும்.
* சனி ஆட்சி செய்யும் மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் சந்திரன் நின்றால், அந்த ஜாதகருக்கு தவறான பழக்க வழக்கம், உணவு முறைகளில் ஏற்படும் தொற்று நோய்கள் வரக் கூடும்.
* சந்திரனோடு, சுப கிரகங்களான குரு, புதன், சுக்ரன் ஆகியோர் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகருக்கு திடகாத்திரமான உடல்வாகும், நல்ல ஆரோக்கியமும், கவர்ச்சியான உடல் அமைப்பும் அமைந்திருக்கும்.
* சந்திரனோடு சூரியன், செவ்வாய் சேர்ந்திருந்தால், அந்த நபர் நல்ல உடல்வாகு பெற்றிருந்தாலும் சின்னச் சின்ன நோய்கள் வந்து போகும்.
* சந்திரனோடு சனி சேர்ந்திருந்தால், அந்த ஜாதகர் சளி, பித்தம், வம்சாவழி நோய்கள் மற்றும் அவ்வப்போது வரும் பருவ மாற்றத்திற்கான பாதிப்புகளில் சிக்கிக்கொள்வார்.
* சந்திரனோடு ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால், அந்த ஜாதகருக்கு ஒல்லியான உடல்வாகு அமைந்திருக்கும். உடல் ஆரோக்கியமும் நல்லபடியாக இருக்கும் என்று கூற முடியாது. ஏதாவது ஒரு உடல் தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.
* சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும், எதிரியாக இருந்தால் அவ்வப்போது தொற்று நோய்கள் வந்து கொண்டே இருக்கும்.
* சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதி, சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதி இருவருமோ அல்லது இவர்களில் ஒருவரோ நீச்ச தன்மை பெற்று இருந்தால், அந்த ஜாதகரையும் நோயையும் பிரிக்க முடியாது. அவரின் இறுதிகாலம் வரை நோய் இருந்து கொண்டே இருக்கும்.
* சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் ஒன்றாக இருப்பது. அதாவது உத்திரம் 1-ம் பாதம் மற்றும் பூரட்டாதி 4-ம் பாதம் ஆகிய இரண்டு நட்சத்திரத்தில் சந்திரன் நிற்கும் போது, ராசி அதிபதியும், நட்சத்திர அதி பதியும் ஒருவராக இருக்கிறார்கள். இந்த இரண்டு நட்சத்திரத்திலும் சந்திரன் நின்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் இருக்கும்.
* குரு, புதன், சுக்ரன் ஆகியோர் ஆட்சி செய்யும் ராசிகளில் சந்திரன் நின்றால், அந்த ஜாதகருக்கு வம்சா வழி நோய்கள் வராது.
* சூரியன், செவ்வாய் ஆகியோரது ஆட்சிக்குரிய ராசிகளில், சந்திரன் நின்றால் அந்த ஜாதகருக்கு புதிய புதிய நோய்கள் வந்து போகும்.
* சனி ஆட்சி செய்யும் மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் சந்திரன் நின்றால், அந்த ஜாதகருக்கு தவறான பழக்க வழக்கம், உணவு முறைகளில் ஏற்படும் தொற்று நோய்கள் வரக் கூடும்.
* சந்திரனோடு, சுப கிரகங்களான குரு, புதன், சுக்ரன் ஆகியோர் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகருக்கு திடகாத்திரமான உடல்வாகும், நல்ல ஆரோக்கியமும், கவர்ச்சியான உடல் அமைப்பும் அமைந்திருக்கும்.
* சந்திரனோடு சூரியன், செவ்வாய் சேர்ந்திருந்தால், அந்த நபர் நல்ல உடல்வாகு பெற்றிருந்தாலும் சின்னச் சின்ன நோய்கள் வந்து போகும்.
* சந்திரனோடு சனி சேர்ந்திருந்தால், அந்த ஜாதகர் சளி, பித்தம், வம்சாவழி நோய்கள் மற்றும் அவ்வப்போது வரும் பருவ மாற்றத்திற்கான பாதிப்புகளில் சிக்கிக்கொள்வார்.
* சந்திரனோடு ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால், அந்த ஜாதகருக்கு ஒல்லியான உடல்வாகு அமைந்திருக்கும். உடல் ஆரோக்கியமும் நல்லபடியாக இருக்கும் என்று கூற முடியாது. ஏதாவது ஒரு உடல் தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X