search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சேரன்மாதேவி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா
    X

    சேரன்மாதேவி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா

    சேரன்மாதேவி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
    சேரன்மாதேவி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று முன்தினம் நடந்தது. அம்பை வட்டார அதிபர் சைமன் தலைமை தாங்கி கொடியேற்றினார். தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    விழா நாட்களில் தினமும் மாலை திருப்பலியும், கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. வருகிற 24-ந் தேதி புனிதரின் சப்பரபவனியும், 25-ந் தேதி ஜூடு பால்ராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலியும், நற்கருணை பவனியும் நடக்கிறது.

    26-ந் தேதி திருவிழா திருப்பலி, தேர்பவனி, அசனவிருந்து போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ரெக்ஸ் ஜஸ்டீன் அடிகளார், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×