search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, மாலை 5 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு திருவிழா கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். இரவு 9 மணிக்கு அன்பியங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    6-ந் தேதி மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். 9-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருவிருந்து திருப்பலி, மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி, 10-ந் தேதி இரவு 9 மணிக்கு தேர் பவனி, 11-ந் தேதி காலை 6 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.

    12-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி, பகல் 12 மணிக்கு ஆடம்பர தேர் பவனி, இரவு 7 மணிக்கு தேரில் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ரால்ப் கிராண்ட் மதன், இணை பங்குதந்தை சகாய ஆன்றனி, பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் கிளாட்சன், செயலாளர் வின்ஸ்டன் லாரன்ஸ், துணை செயலாளர் கலா மேரி, பொருளாளர் ஜார்ஜ் சகாய ஜோஸ், மற்றும் பங்கு இறைமக்கள், அருட்சகோதரிகள் செய்துள்ளனர்.
    Next Story
    ×