என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோட்டார் சவேரியார் பேராலயத்தில் சமய நல்லிணக்க விழா
Byமாலை மலர்28 Nov 2018 3:48 AM GMT (Updated: 28 Nov 2018 3:48 AM GMT)
கோட்டார் புனித சவேரியார் பேராலய 4-ம் நாள் திருவிழாவையொட்டி சமய நல்லிணக்க விழா நேற்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் கோட்டார் சவேரியார் பேராலயமும் ஒன்று. இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் நவம்பர் 24-ந் தேதி முதல் டிசம்பர் 3-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டு 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடைபெற்றது.
இந்த நிலையில் 4-ம் நாள் திருவிழாவான நேற்று சமய நல்லிணக்க விழா நடந்தது. கத்தோலிக்க சங்கம், கத்தோலிக்க சேவா சங்கம் மற்றும் குமரி மாவட்ட திருவருட் பேரவை இணைந்து இந்த விழாவை நடத்தின.
விழாவுக்கு புனித சவேரியார் பேராலய பங்கு அருட்பணியாளர் கிரேஸ் குணபால் ஆராச்சி தலைமை தாங்கினார். பேராலய அருட்பணி பேரவை செயலாளர் ஆன்டனி சவரிமுத்து, குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய துணை தலைவர் ஷாஜின்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளங்கடை முஸ்லிம் ஜமாத் தலைவர் பாவலர் சித்திக், வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, இணைபங்கு அருப்பணியாளர் ஆன்டனி பாபு, கோட்டார் வட்டார குருகுல முதல்வர் மைக்கேல் ஆஞ்சல் ஆகியோர் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நலத்திட்ட உதவியாக தையல் எந்திரம், அரிசி, சேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. முன்னதாக தேவசகாயம் மவுண்ட் வட்டார அருட்பணியாளர்கள் தலைமையில் மறையுரையாற்றப்பட்டது.
சவேரியார் பேராலயத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ள 5-ம் நாள் திருவிழா நகர வியாபாரிகள் சார்பில் நடக்கிறது. விழாவையொட்டி கணேசபுரம் ரோடு சந்திப்பில் இருந்து கோட்டார் ரெயில்வே ரோடு வரை சாலையோரம் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு வருபவர்கள் இந்த கடைகளில் பொருட்கள் வாங்கி மகிழ்கிறார்கள்.
இந்த நிலையில் 4-ம் நாள் திருவிழாவான நேற்று சமய நல்லிணக்க விழா நடந்தது. கத்தோலிக்க சங்கம், கத்தோலிக்க சேவா சங்கம் மற்றும் குமரி மாவட்ட திருவருட் பேரவை இணைந்து இந்த விழாவை நடத்தின.
விழாவுக்கு புனித சவேரியார் பேராலய பங்கு அருட்பணியாளர் கிரேஸ் குணபால் ஆராச்சி தலைமை தாங்கினார். பேராலய அருட்பணி பேரவை செயலாளர் ஆன்டனி சவரிமுத்து, குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய துணை தலைவர் ஷாஜின்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளங்கடை முஸ்லிம் ஜமாத் தலைவர் பாவலர் சித்திக், வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, இணைபங்கு அருப்பணியாளர் ஆன்டனி பாபு, கோட்டார் வட்டார குருகுல முதல்வர் மைக்கேல் ஆஞ்சல் ஆகியோர் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நலத்திட்ட உதவியாக தையல் எந்திரம், அரிசி, சேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. முன்னதாக தேவசகாயம் மவுண்ட் வட்டார அருட்பணியாளர்கள் தலைமையில் மறையுரையாற்றப்பட்டது.
சவேரியார் பேராலயத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ள 5-ம் நாள் திருவிழா நகர வியாபாரிகள் சார்பில் நடக்கிறது. விழாவையொட்டி கணேசபுரம் ரோடு சந்திப்பில் இருந்து கோட்டார் ரெயில்வே ரோடு வரை சாலையோரம் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு வருபவர்கள் இந்த கடைகளில் பொருட்கள் வாங்கி மகிழ்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X