search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு சொன்ன உவமைகள் : விருந்துக்கான அழைப்பு
    X

    இயேசு சொன்ன உவமைகள் : விருந்துக்கான அழைப்பு

    மரணத்துக்குப் பிந்தைய வாழ்வைப்பற்றியும், அந்த மறுவுலக விருந்தைப் பற்றியும் யூதர்களும், ஆபிரகாமின் வழித்தோன்றல்களும் அறிந்திருந்தனர்.
    லூக்கா 14 : 15..24

    இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இவற்றைக் கேட்டு அவரிடம், “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்” என்றார். இயேசு அவரிடம் கூறியது:

    “ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, ‘வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது’ என்று சொன்னார். அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர்.

    முதலில் ஒருவர், ‘வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார். ‘நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார் வேறொருவர். ‘எனக்கு இப்போது தான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது’ என்றார் மற்றொருவர்.

    பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார். வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், ‘நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும்’, என்றார். பின்பு பணியாளர், ‘தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது’ என்றார்.

    தலைவர் தம் பணியாளரை நோக்கி, ‘நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும். அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்’ என்றார்.”

    கதையின் பின்னணி இது தான் :

    இயேசுவை ஒருவர் விருந்துக்கு அழைக்கிறார். அங்கே எல்லோரும் முதன்மை இடங்களுக்குப் போட்டி போடுகிறார்கள். இயேசு அவர்களிடம், எப்போதும் கடைசி இடங்களையே தேர்ந்து கொள்ளுங்கள். தாழ்மையை விரும்புவதே மேன்மையின் முதல்படி என்கிறார். பின் விருந்து ஏற்பாடு செய்திருந்தவரிடம், விருந்துக்கு அழைக்கும்போது ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், கைவிடப்பட்டோர் ஆகியோரை அழையுங்கள். அப்போதுதான் அவர்கள் உமக்கு கைமாறு செய்ய மாட்டார்கள். கடவுள் உம்மை ஆசீர்வதிப்பார் என்கிறார்.

    இந்த சூழலில் தான் பந்தியிலிருந்த ஒருவர் இந்த வாக்கியத்தைச் சொல்கிறார்.

    “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்”. மரணத்துக்குப் பிந்தைய வாழ்வைப்பற்றியும், அந்த மறுவுலக விருந்தைப் பற்றியும் யூதர்களும், ஆபிரகாமின் வழித்தோன்றல்களும் அறிந்திருந்தனர். எனவே தான் தாங்கள் ஏற்கனவே அழைக்கப்பட்டவர்கள் எனும் மெல்லிய கர்வத்தில் அவர் அதைச் சொல்கிறார்.

    இயேசு பதிலாகச் சொன்ன கதையோ அவர்களைக் குழப்பமும் கோபமும் அடையச் செய்திருக்க வேண்டும். இப்போது அந்தக் கதையை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்.
    Next Story
    ×