search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய பெருவிழா நாளை தொடங்குகிறது
    X

    புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய பெருவிழா நாளை தொடங்குகிறது

    நாகர்கோவில் வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6.15 மணிக்கு செபமாலை, திருக்கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. வேதநகர் பங்குதந்தை பெலிக்ஸ் கொடியேற்றி வைக்கிறார். மறை மாவட்ட அன்பிய ஒருங்கிணைய இயக்குனர் வலேரியன் தலைமை தாங்குகிறார். குறும்பனை துணை பங்குதந்தை சகாய கிளாசின் மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் செபமாலை, திருப்பலி மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

    9-ம் திருவிழாவன்று காலை குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு நடைபெறும் செபமாலைக்கு கிறிஸ்துநகர் பங்குதந்தை தாமஸ் அருள் ஆனந்த் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் மைக்கேல் பிரான்சிஸ் மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

    10-ம் திருவிழாவன்று காலை கோட்டார் மறைவட்ட முதன்மை குரு மைக்கேல் ஆஞ்சலுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி முடிவில் நற்கருணை ஆசீர், தொடர்ந்து சிறுசேமிப்பு ஆண்டு விழா, பரிசு வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 
    Next Story
    ×