search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    நாகர்கோவில் அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    இன்று மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. அருட்பணி செல்வராஜ் கொடியேற்றி வைக்கிறார். அருட்பணி தேவதாஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணி மைக்கேல் ஏஞ்சல் மறையுரையாற்றுகிறார்.

    2-ந் தேதி மதியம் 12 மணிக்கு அன்பு விருந்தும், மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

    8-ந் தேதி காலை 7.15 மணிக்கு ஜெபமாலை, முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு மறைமாவட்ட முதன்மை குரு வி.ஹிலாரியுஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணி பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, மாலை ஆராதனை நடக்கிறது. இதற்கு அருட்பணி டயனிஷியஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணி கிளேட்டன் மறையுரையாற்றுகிறார்.

    9-ந் தேதி 10-ம் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7.45 மணிக்கு ஜெபமாலையும், பெருவிழா திருப்பலியும் நடக்கிறது. அருட்பணி ரால்ப் கிராண்ட் மதன் தலைமை தாங்குகிறார். அருட்பணி பஸ்காலிஸ் மறையுரையாற்றுகிறார்.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பி.பிரபு, பங்கு இறைமக்கள், பங்கு மேய்ப்பு பணி பேரவையினர் செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×