என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்31 Aug 2018 3:37 AM GMT (Updated: 31 Aug 2018 3:37 AM GMT)
ராஜாக்கமங்கலம்துறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
ராஜாக்கமங்கலம்துறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து அருட்தந்தையர்கள் ஆன்றனி அல்காந்தர், ஜோசப் ரொமால்ட் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.
2-ந் தேதி காலை 7.30 மணிக்கு அருட்தந்தை அல்போன்ஸ் தலைமையில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு கலைநிகழ்ச்சிகள், கைப்பந்து போட்டி, கபடி போட்டி ஆகியவை நடைபெறுகிறது.
8-ந் தேதி காலை 7 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து அருட்தந்தை செல்வராஜ் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி, மாலை 6 மணிக்கு ஆராதனை ஆகியவை நடக்கிறது.
9-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு புனித ஜெரோம் கல்லூரி அதிபர் அருட்தந்தை ஆக்னல் தலைமை தாங்கி திருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறார். 8 மணிக்கு பாதுகாவலர் திருவிழா திருப்பலி, மாலை 4 மணிக்கு அன்னையின் தேர் பவனி, 6 மணிக்கு ஜெபமாலை, கொடியிறக்கம், நன்றி வழிபாடு நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ராஜ், பங்கு பேரவையினர், ஊர் பொதுமக்கள், அருட் சகோதரிகள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
2-ந் தேதி காலை 7.30 மணிக்கு அருட்தந்தை அல்போன்ஸ் தலைமையில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு கலைநிகழ்ச்சிகள், கைப்பந்து போட்டி, கபடி போட்டி ஆகியவை நடைபெறுகிறது.
8-ந் தேதி காலை 7 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து அருட்தந்தை செல்வராஜ் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி, மாலை 6 மணிக்கு ஆராதனை ஆகியவை நடக்கிறது.
9-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு புனித ஜெரோம் கல்லூரி அதிபர் அருட்தந்தை ஆக்னல் தலைமை தாங்கி திருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறார். 8 மணிக்கு பாதுகாவலர் திருவிழா திருப்பலி, மாலை 4 மணிக்கு அன்னையின் தேர் பவனி, 6 மணிக்கு ஜெபமாலை, கொடியிறக்கம், நன்றி வழிபாடு நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ராஜ், பங்கு பேரவையினர், ஊர் பொதுமக்கள், அருட் சகோதரிகள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X