search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூண்டி மாதா பேராலயத்தில் கன்னி மரியாள் பிறப்பு திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    பூண்டி மாதா பேராலயத்தில் கன்னி மரியாள் பிறப்பு திருவிழா இன்று தொடங்குகிறது

    பூண்டி மாதா பேராலயத்தில் கன்னி மரியாள் பிறப்பு திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.
    தஞ்சை மாவட்டம் பூண்டியில் உள்ள மாதா பேராலயம் பிரசித்திப்பெற்ற பேராலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் கன்னி மரியாள் பிறப்பு திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

    கொடியேற்றத்தையொட்டி இன்று மாலை பூண்டி மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்து வரப்படும். ஊர்வலம் கொடிமேடையை அடைந்ததும் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்து, பேராலய புதுமை மாதாவின் பிறப்பு திருவிழாவை தொடங்கி வைப்பார்.

    இதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெறும். இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, மறை வட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பேராலய துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ், ஆன்மிக தந்தை அருள் மற்றும் சுற்றுவட்டார அருட்தந்தையர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து நவ நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் மாலையில் சிறிய சப்பரத்தில் மாதா பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நவ நாட்களில் சிறப்பு திருப்பலிகளும் நடைபெற உள்ளன. கன்னி மரியாள் பிறந்த நாளான அடுத்த மாதம் 8-ந் தேதி அன்று மாலை சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×