என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
Byமாலை மலர்16 July 2018 3:10 AM GMT (Updated: 16 July 2018 3:10 AM GMT)
தமிழகத்தில் உள்ள பிஷப்களின் ஆண்டு பேரவை கூட்டம் பூண்டி மாதாபேராலயத்தில் தொடங்கியது. இந்த கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள பிஷப்களின் ஆண்டு பேரவை கூட்டம் பூண்டி மாதாபேராலயத்தில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தஞ்சை, திருச்சி, கும்பகோணம், மயிலை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள 23 மறை மாவட்ட பிஷப்கள் கலந்து கொண்டனர். தமிழக பிஷப் களின் தலைவர் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் அனைத்து பிஷப்களும் இணைந்து சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர். இதில் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் ஆன்மிக, அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் செய்திருந்தனர்.
இந்த கூட்டத்தில் தஞ்சை, திருச்சி, கும்பகோணம், மயிலை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள 23 மறை மாவட்ட பிஷப்கள் கலந்து கொண்டனர். தமிழக பிஷப் களின் தலைவர் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் அனைத்து பிஷப்களும் இணைந்து சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர். இதில் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் ஆன்மிக, அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X