search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இளங்கடை புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    இளங்கடை புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    நாகர்கோவில், இளங்கடை புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில், இளங்கடை புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி வட்டார முதன்மை அருட்பணியாளர் ஜோசப் ரொமால்ட் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜெகன் மறையுரை ஆற்றுகிறார்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை நடக்கிறது. வருகிற 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை மாலையில் நற்செய்தி கூட்டங்கள் நடைபெறுகிறது.

    வருகிற 10-ந் தேதி காலை 7 மணிக்கு, முதல் திருவிருந்து திருப்பலியும், 16-ந் தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலியும், இரவு 9 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது.

    திருவிழாவின் நிறைவு நாளான 17-ந் தேதி காலை 7 மணிக்கு கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கல் ஏஞ்சலூஸ் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு தேர் பவனியும், இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழாவும் நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் ராஜ் தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், பங்குமக்கள் செய்துள்ளனர். 
    Next Story
    ×