search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    நாகர்கோவில் தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி, 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி, 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு செபமாலை, 6.30 மணிக்கு கொடிமரம் அர்ச்சிப்பு, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில், கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் திருப்பலி, செபமாலை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளாக வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்கு குணமளிக்கும் வழிபாடு நடக்கிறது.

    19-ந் தேதி காலை 7 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் பஸ்காலிஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, தேர்ப்பவனி போன்றவை நடைபெறுகிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 20-ந் தேதி காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் மைக்கல் ஏஞ்சல் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 3 மணிக்கு தேர்ப்பவனியும், மாலை 7 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர். 
    Next Story
    ×