search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திண்டுக்கல் வந்து சேர்ந்த போப் ஆண்டவர் ஆசீர்வதித்த மாதா சிலை
    X

    திண்டுக்கல் வந்து சேர்ந்த போப் ஆண்டவர் ஆசீர்வதித்த மாதா சிலை

    போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆசீர்வதித்த மாதா சிலைக்கு மதுரை ரோடு சவேரியார் பாளையத்தில் மும்மத தலைவர்கள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
    போர்ச்சுகல் நாட்டில், கடந்த 1917-ம் ஆண்டு பிரான்சிஸ்கோ, ஜெசிந்தா, லூசியா என்ற 3 சிறுவர்களுக்கு மாதா காட்சியளித்தார். மாதா காட்சியளித்து 100 ஆண்டுகள் ஆகிறது. இதனை நினைவு கூறும் வகையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், 4 மாதா சிலைகளை ஆசீர்வதித்து உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களுக்கு அனுப்பி வைத்தார். அங்கு, மக்கள் பார்வைக்காக மாதா சிலை வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல்லுக்கு வந்த மாதா சிலைக்கு மதுரை ரோடு சவேரியார் பாளையத்தில் மும்மத தலைவர்கள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    அதன்பிறகு பூச்சிநாயக்கன்பட்டி பிரிவு, பேகம்பூர் பெரிய மசூதி, மணிக்கூண்டு அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டு, திண்டுக்கல் புனித வளனார் தேவாலயத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. மாலையில் ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திண்டுக்கல் மறைமாவட்டத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாதா சிலையை வணங்கினர். இன்று மேட்டுப்பட்டி தேவாலயத்தில் மாதா சிலை மக்கள் பார்வைக்காக வைக்கப்படுவதாக பங்குத்தந்தையர்கள் கூறினர்.
    Next Story
    ×