search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அழகப்பபுரத்தில் புனித லூர்து அன்னை திருவிழா
    X

    அழகப்பபுரத்தில் புனித லூர்து அன்னை திருவிழா

    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில், புனித லூர்து அன்னை திருவிழா நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில், புனித லூர்து அன்னை திருவிழா நடந்தது. இதையொட்டி பங்குமக்கள் எரியும் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி ஜெபமாலை ஜெபித்து, பாடல்கள் பாடி பவனியாக வந்தனர்.

    இந்த பவனி மேல்நிலைப்பள்ளி சாலை, மெயின் ரோடு, பார்க் தெரு, கோவில் தெரு வழியாக நடந்தது. பின்னர் பாளையங்கோட்டை மறைமாவட்டம் கே.டி.சி. நகர் பங்குத்தந்தை சார்லஸ் தலைமையில் திருப்பலி நடந்தது.

    இதில் பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை மைக்கிள் ராயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×