search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை குழந்தை ஏசு ஆலய தேர்பவனி
    X

    தஞ்சை குழந்தை ஏசு ஆலய தேர்பவனி

    தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ள குழந்தை ஏசு ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது.
    தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் குழந்தை ஏசு ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்துக்கு தஞ்சை மாவட்ட தலைமை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமை தாங்கினார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் குழந்தை ஏசுவை வைத்து தேர்பவனி நடைபெற்றது. பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜுடு பால்ராஜ் புனிதம் செய்து தேர்பவனியை தொடங்கி வைத்தார். முன்னதாக கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    விழாவில் குடந்தை ஆயர் அந்தோணிசாமி, ஆலய அதிபர் வென்சஸ்லாஸ் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×