search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அழகப்பபுரத்தில் புனித காணிக்கை அன்னை திருவிழா
    X

    அழகப்பபுரத்தில் புனித காணிக்கை அன்னை திருவிழா

    அழகப்பபுரத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்குள்ள புனித காணிக்கை அன்னை திருவிழா நேற்று தொடங்கி அடுத்த மாதம் 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.
    அழகப்பபுரத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு புனித காணிக்கை அன்னை திருவிழா நேற்று தொடங்கியது. திருவிழா அடுத்த மாதம் 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கும், காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

    அடுத்த மாதம் 1-ந் தேதி இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட செயலாளர் நார்பர்ட் தாமஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை, இரவு 10 மணிக்கு தேர்ப்பவனி, 2-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜாண் பிரிட்டோ தலைமையில் கூட்டுத்திருப்பலி, பகல் 2.30 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு தேரில் நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை மைக்கிள் ராயப்பன் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×