என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பூண்டிமாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
Byமாலை மலர்2 Jan 2019 3:30 AM GMT (Updated: 2 Jan 2019 3:30 AM GMT)
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நள்ளிரவு நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் புத்தாண்டு வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு புத்தாண்டையொட்டி பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நள்ளிரவு நடைபெற்றது.
முன்னதாக பேராலய நுழைவு வாயிலில் இருந்து பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் அருட்தந்தையர்கள் வழக்கமான முறைப்படி பேராலயத்தில் குழுமியிருந்து பக்தர்களின் இடையே வந்தனர். பின்னர் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ் மற்றும் அருட்தந்தையர்கள் திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து புத்தாண்டில் அனைவரும் வளமாக நலமுடன் வாழ பேராலய அதிபர் பாக்கியசாமி வாழ்த்தினார்.
நேற்று காலை, மதியம், மாலையிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. புத்தாண்டையொட்டி பூண்டி மாதா பேராலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. புத்தாண்டு வழிபாடு ஏற்பாடுகளை பேராலய அதிபர்பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். இதைப்போல முத்தாண்டிப்பட்டி, மைக்கேல்பட்டி, மணத்திடல், சுக்காம்பார், கோட்டரப்பட்டி, மேகளத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
முன்னதாக பேராலய நுழைவு வாயிலில் இருந்து பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் அருட்தந்தையர்கள் வழக்கமான முறைப்படி பேராலயத்தில் குழுமியிருந்து பக்தர்களின் இடையே வந்தனர். பின்னர் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ் மற்றும் அருட்தந்தையர்கள் திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து புத்தாண்டில் அனைவரும் வளமாக நலமுடன் வாழ பேராலய அதிபர் பாக்கியசாமி வாழ்த்தினார்.
நேற்று காலை, மதியம், மாலையிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. புத்தாண்டையொட்டி பூண்டி மாதா பேராலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. புத்தாண்டு வழிபாடு ஏற்பாடுகளை பேராலய அதிபர்பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். இதைப்போல முத்தாண்டிப்பட்டி, மைக்கேல்பட்டி, மணத்திடல், சுக்காம்பார், கோட்டரப்பட்டி, மேகளத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X