search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு
    X

    பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு

    பூண்டி மாதா பேராலயத்தில் ஒவ்வொரு மாதமும் புதுமை இரவு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்துக்கான (ஜூலை) புதுமை இரவு வழிபாடு நடந்தது.
    பூண்டி மாதா பேராலயத்தில் ஒவ்வொரு மாதமும் புதுமை இரவு வழிபாடு நடைபெறுவது வழக்கம். பக்தர்களின் மன அழுத்தத்தை போக்கவும், உலக அமைதிக்காகவும் இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.

    இந்த மாதத்துக்கான (ஜூலை) புதுமை இரவு வழிபாடு நடந்தது. இதில் காங்கேயம் குறைதீர்க்கும் குழந்தை மாதா ஆலய பங்குத்தந்தை கிளாடியஸ் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினார். இதைத்தொடர்ந்து பூண்டி மாதாவின் தேர் பவனி நடந்தது.

    அப்போது பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி நின்று மாதாவை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைசாமி, உதவி பங்குத்தந்தையர்கள் எடிசன்ராஜ், அமலதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×