என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
என்.பூலாம்பட்டியில் அருளப்பர் ஆலய தேர்பவனி
Byமாலை மலர்25 Jun 2018 5:11 AM GMT (Updated: 25 Jun 2018 5:11 AM GMT)
மணப்பாறையை அடுத்த என்.பூலாம்பட்டியில் புனித ஸ்நாபக அருளப்பர் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
மணப்பாறையை அடுத்த என்.பூலாம்பட்டியில் புனித ஸ்நாபக அருளப்பர் ஆலயம் உள்ளது. பழமையான இந்த ஆலயம் கட்டப்பட்டு 300-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் திருவிழா கடந்த 15-ந் தேதி மாலை திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலி நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் அலங்கரிப்பட்ட 4 தேர்கள் சிறப்பு திருப்பலிக்கு பின் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து ஆலயத்தை அடைந்தன. நேற்று மாலை பெரிய தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட புனித ஸ்நாபக அருளப்பர் சொரூபம், பெரிய தேரில் வைக்கப்பட்டதை அடுத்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் பங்குத்தந்தைகள் தேரை மந்திரித்தனர்.
முன்னால் 4 சப்பரங்கள் செல்ல அதை தொடர்ந்து ஆலயம் முன்பிருந்து பங்குத்தந்தைகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேர்பவனியை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். வீதிகளில் தேர் சென்றபோது உப்பு மற்றும் பொட்டுக்கடலையை தூக்கி வீசினர். வீதிகளில் பவனி வந்த தேர் ஆலயத்தை அடைந்தது.
திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆண்டனி டிவோட்டா, திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். திருவிழாவின்போது பொதுமக்கள் துடைப்பத்தை வாங்கி கோவிலில் போட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். திருவிழாவையொட்டி அதிக அளவில் மாம்பழக்கடைகள் வைக்கப்பட்டிருந்தன.
முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் அலங்கரிப்பட்ட 4 தேர்கள் சிறப்பு திருப்பலிக்கு பின் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து ஆலயத்தை அடைந்தன. நேற்று மாலை பெரிய தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட புனித ஸ்நாபக அருளப்பர் சொரூபம், பெரிய தேரில் வைக்கப்பட்டதை அடுத்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் பங்குத்தந்தைகள் தேரை மந்திரித்தனர்.
முன்னால் 4 சப்பரங்கள் செல்ல அதை தொடர்ந்து ஆலயம் முன்பிருந்து பங்குத்தந்தைகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேர்பவனியை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். வீதிகளில் தேர் சென்றபோது உப்பு மற்றும் பொட்டுக்கடலையை தூக்கி வீசினர். வீதிகளில் பவனி வந்த தேர் ஆலயத்தை அடைந்தது.
திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆண்டனி டிவோட்டா, திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். திருவிழாவின்போது பொதுமக்கள் துடைப்பத்தை வாங்கி கோவிலில் போட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். திருவிழாவையொட்டி அதிக அளவில் மாம்பழக்கடைகள் வைக்கப்பட்டிருந்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X