search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி
    X

    புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி

    கடலூர் புதுநகர் பங்குக்கு உட்பட்ட சொரக்கால் பட்டில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவில் நடைபெற்றது.
    கடலூர் புதுநகர் பங்குக்கு உட்பட்ட சொரக்கால் பட்டில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந்தேதி திருப்பலி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவில் நடைபெற்றது.

    இதையொட்டி மலர்களாலும், வண்ண மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டு பவனி நடந்தது. பவனியின் முன்னால் பேண்டு வாத்தியம் முழங்க, பாடல் குழுவினர் புனித அந்தோணியாரை வாழ்த்தி பாடல் பாடியபடி சென்றனர். புனித அந்தோணியாரின் திருத்தலத்தில் இருந்து புறப்பட்ட பவனி சொரக்கால் பட்டு வீதிவழியாக வந்து மீண்டும் திருத்தலத்தை வந்தடைந்தது. முன்னதாக மாலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×