search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பொன்மலை சூசையப்பர் ஆலய தேர்பவனி
    X

    பொன்மலை சூசையப்பர் ஆலய தேர்பவனி

    திருச்சி பொன்மலையில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சி பொன்மலையில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் ஆலயத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

    உழைப்பாளர்களின் பாதுகாவலர் என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படுபவர் சூசையப்பர். உழைப்பாளர் தினமான மே 1-ந் தேதி இந்த ஆலயத்தில் தேர்பவனி நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடைபெற்றது. பங்கு தந்தை சின்னப்பன மற்றும் உதவி பங்குத்தந்தை பிலவேந்திரன் ஆகியோர் சிறப்பு புனிதம் செய்து தேர் பவனியை தொடங்கி வைத்தனர்.

    தேரில் உயிர்த்தெழுந்த இயேசு, மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய தெய்வங்களை எழுந்தருள செய்து பவனி வந்தன. முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்து ஆலயத்தை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் இயக்கத்தினர் செய்து இருந்தனர். 
    Next Story
    ×