search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வம்பில் சிக்கிய நடிகர், பேச்சுவார்த்தைக்கு அழைத்தாராம்
    X

    வம்பில் சிக்கிய நடிகர், பேச்சுவார்த்தைக்கு அழைத்தாராம்

    சினிமா, காதல் என பல்வேறு விஷயங்களால் அடிக்கடி கிசுகிசுக்கப்படும் நடிகர் ஒருவர், தற்போது புதிய வகை வம்பில் சிக்கிக் கொண்டுள்ளாராம். #Gossip
    சர்ச்சைக்கு பெயர்போன நடிகர், அறிமுகமான காலத்தில் நடித்த ஒரு படம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறதாம். அந்த நடிகரின் தந்தையும், இயக்குநருமானவர் சமீபத்தில் போலீஸ் நிலையத்தில் மனு கொடுக்க வந்த பிறகு தான் இந்த பிரச்சனை பூதாகரமாக கிளம்பியிருக்கிறதாம்.

    அந்த படத்தின் கதை தன்னுடையது என்றும், நடிகரும், நடிகரின் தந்தையும் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் படத்தை இயக்கிய இயக்குநர் சொல்லி வருகிறாராம். மேலும் பத்திரிகையாளர்களை அழைத்து அவர் இதுகுறித்து விளக்க இருந்தாராம்.

    இவ்வாறாக பிரச்சனை அடுத்த கட்டத்திற்கு நகர்வதால், பேச்சுவார்த்தை நடத்த அந்த இயக்குநரை அழைத்துள்ளார்களாம். இதையடுத்து அந்த இயக்குநர் தற்போது அமைதி காத்து வருகிறாராம். தமிழ் சினிமாவில் கதை திருட்டு பற்றி கேள்வி பட்டிருக்கிறோம், ஆனால் இது புது வகையாக இருக்கிறதே என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம். #Gossip

    Next Story
    ×