search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
    X

    ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்

    சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சியில் நடிகை சாக்‌ஷி அகர்வால் கலந்துக் கொண்டுள்ளார்.
    உலக பசி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை சாக்‌ஷி அகர்வால் கலந்துக் கொண்டார். 

    அதன்பின் பேசிய சாக்‌ஷி அகர்வால், ‘உலகில் நிறைய பேர் பசியால் இறந்து போகிறார்கள். உலக பசி தினத்தை உலகம் முழுவதும் யாரும் கொண்டாட கூடாத நிலையை நாம் அனைவரும் உருவாக்க வேண்டும். ஒவ்வொருவரும் இரண்டு குழந்தைகளுக்கு உணவு வழங்கினால் பசி என்ற வார்த்தையை இல்லாமல் ஆக்கலாம்’ என்றார்.



    இந்த நிகழ்ச்சியில் நடிகை சாக்‌ஷி அகர்வால் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி, ஊட்டி விட்டு அவர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறார். 
    Next Story
    ×