search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
    X

    நயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `கொலையுதிர் காலம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள `மிஸ்டர்.லோக்கல்' படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `கொலையுதிர் காலம்' படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.  தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.



    எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

    நயன்தாரா தற்போது சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் தளபதி 63 உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×