search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காஞ்சனா படத்தில் இருந்து வெளியேறிய ராகவா லாரன்ஸ்
    X

    காஞ்சனா படத்தில் இருந்து வெளியேறிய ராகவா லாரன்ஸ்

    அக்‌ஷய் குமாரை வைத்து இந்தியில் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்கி வந்த ராகவா லாரன்ஸ், தற்போது அந்த படத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
    லாரன்ஸ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘காஞ்சனா’. காமெடி, ஹாரர் கலந்த திரில்லர் படமாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து, ‘காஞ்சனா 2’, ‘காஞ்சனா 3’ பாகங்கள் வெளியாகிவிட்டது.

    தற்போது காஞ்சனா முதல் பாகம் இந்தியில் ‘லட்சுமி பாம்’ (Laaxmi Bomb) என்ற பெயரில் ரீமேக் உருவாகி வருகிறது. லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமாருகும், சரத்குமார் வேடத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கிறார்கள். கதாநாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்.



    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், லட்சுமி பாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் அக்‌ஷய் குமார் பெண் வேடமேற்று மேக்கப் செய்யும்படி இருந்தது. மேலும் படத்தை 2020-ல் ஜூன் 5ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், இப்படத்தில் இருந்து விலகுவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு படைப்பாளிக்கு பணம், புகழை விட தன்மானம் தான் முக்கியம் என்றும், நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தன்னுடைய பார்வைக்கு வராமலேயே வெளிவந்துவிட்டதாகவும், அந்த போஸ்டரின் டிசைன் தனக்கு திருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு படைப்பாளியாக தான் இந்த விஷயத்தில் அவமதிப்பு செய்யப்பட்டதாகவும் இதன் காரணமாக இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×