search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மனக்கசப்புகள் நீங்கின - இளையராஜா இசை மேடையில் எஸ்.பி.பி
    X

    மனக்கசப்புகள் நீங்கின - இளையராஜா இசை மேடையில் எஸ்.பி.பி

    ராயல்டி பிரச்சினையால் பேசாமல் இருந்து வந்த இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் ஒரே மேடையில் தோன்ற இருக்கிறார்கள். #Ilayaraja #SPB
    இளையராஜாவின் 75வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதற்காக கல்லூரிகளில் அவரை வைத்துப் பாராட்டு விழாக்களையும், இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

    தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த பிப்ரவரி மாதம் இளையராஜாவை வைத்து பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தியது. அந்த நிகழ்ச்சியை நேரிலும், தொலைக்காட்சியிலும் கண்டு ரசித்த இசை ரசிகர்களுக்கு அதில் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி போன்ற இளையராஜாவின் முக்கியமான பாடகர்கள் பங்கேற்கவில்லை என்ற ஒரு குறை இருந்து வந்தது.

    பாடல்களின் காப்புரிமை யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் சட்ட சிக்கல்கள் நிலவி வந்ததால் இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க வில்லை.



    தற்போது இளையராஜாவின் பிறந்தநாளான வரும் ஜூன் 2-ந்தேதி சென்னையில் நடக்க இருக்கும் இளையராஜாவின் கச்சேரியில் பாடுவதற்காக எஸ்.பி.பி பங்கேற்கிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதற்கான ஒத்திகை வரும் மே 22-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது. எஸ்.பி.பி மட்டுமல்லாது யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உட்பட பல முன்னணி பாடகர்கள் பங்கேற்று பாட இருக்கின்றனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு இணையதளத்தில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இளையராஜா, எஸ்பிபி தரப்பில் கேட்டதற்கு இது இன்னும் உறுதிபடுத்தப்பட வில்லை என்றனர்.

    ராயல்டி பிரச்சினையால் பேசாமல் இருந்து வந்த இந்த இரண்டு இசைக்கலைஞர்களும் ஒரு வழியாக இணைந்து ஒரே மேடையில் இசைக் கச்சேரியில் தோன்றுவது இசை ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
    Next Story
    ×