search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    உதவியாளரை காப்பாற்ற முடியவில்லை - சன்னி லியோன் கண்ணீர் பேச்சு
    X

    உதவியாளரை காப்பாற்ற முடியவில்லை - சன்னி லியோன் கண்ணீர் பேச்சு

    தனது உதவியாளரை காப்பாற்ற முடியவில்லையே என்று நடிகை சன்னி லியோன் கண்ணீர் விட்டு அழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. #SunnyLeone
    நடிகை சன்னி லியோன் பஞ்சாப்பில் பிறந்து அமெரிக்காவில் நடிகையாக புகழ்பெற்றவர். இப்போது இந்தி சினிமாவில் கவர்ச்சி அல்லாத கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    ஆனால் அவரை நீலப்பட நடிகை என்றும் இவரது பழைய தொழிலை வைத்தும் கேலியாக பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து சன்னி லியோன் அவ்வப்போது வருத்தம் தெரிவிப்பார்.

    சமீபத்தில், நடிகர் அர்பாஸ் கான் இந்தியில் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சமூகவலைதளத்தில் சன்னி லியோன் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், துணை நடிகரும். அவரது உதவியாளருமான ஒருவருக்கு உதவி கோரி பகிரப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்புகள் எழுந்தன.

    இதுகுறித்து நிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சன்னி லியோன் கூறியதாவது:-

    அவர் பெயர் பிரபாகர். என்னுடைய உதவியாளராக இருந்து வந்தார். நான் அந்த பதிவிடும் சில மாதங்களுக்கு முன்பே அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது. 20 சதவிகிதம் மட்டுமே அவரது சிறுநீரகம் வேலைசெய்து வந்ததால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருந்தது.

    அவருடைய மருத்துவமனை செலவுகள் அனைத்தையும் நானும், என் கணவரும் பார்த்துக்கொண்டோம். நமது நண்பர் அல்லது நம்முடன் வேலைபார்க்கும் ஒருவர் சாகப்போகிறார் எனத் தெரிந்தும் உதவி செய்யாமல் இருந்தால், அது மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும்.



    பிரபாகரை எனக்கு நன்கு தெரியும். பல ஆண்டுகளாக இந்த துறையில் வேலை பார்த்துவருகிறார். நிறைய பேருக்கு அவரைப் பிடிக்கும். அவருக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது வெறும் மருத்துவமனை கட்டணம் கட்டுவதற்காக அல்ல.

    அவருக்கு என்று தனி குடும்பம் இருந்தது. ஒரு மகன் இருந்தான். அவர்களுக்கு உதவ கோரிக்கை வைத்து தான் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள் என அதை பதிவிட்டேன்.

    மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. நான் நூறு மில்லியன் டாலருக்கு சொந்தக்காரி என அவர்கள் நினைப்பது பற்றி சிந்திக்கவில்லை. என்னை பொறுத்தவரை உங்களை மிகவும் நேசிக்கிற அனைவருக்கும், உங்களை கவனித்துக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் உதவ வேண்டும்.

    பிரபாகர் மிகவும் அமைதியான மனிதர். தான் நோயுற்று இருந்தபோது கூட தனக்காக எந்த உதவியும் அவர் கேட்கவில்லை. அவருக்காக நிறையச் செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனால் செய்யவில்லை. நாங்கள் அவரைக் காப்பாற்றத் தவறிவிட்டோம்.

    இதை நினைக்கும்போது உண்மையில் மனது வலிக்கிறது. அவரை நாங்கள் நிறையவே மிஸ் செய்கிறோம்.’

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோவைப் பார்த்து பலரும் சன்னி லியோனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர். #SunnyLeone

    Next Story
    ×