search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய் சேதுபதிக்கு மலையாள தயாரிப்பாளர் பாராட்டு
    X

    விஜய் சேதுபதிக்கு மலையாள தயாரிப்பாளர் பாராட்டு

    ‘மார்க்கோனி மித்தாய்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகும் விஜய் சேதுபதியை படப்பிடிப்பில் சந்தித்த மலையாள தயாரிப்பாளர் ஜோசப் அவரை பாராட்டி கருத்து பதிவு செய்துள்ளார். #VijaySethupathi #MarconiMathai
    விஜய் சேதுபதி, ‘சைரா’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். ‘மார்க்கோனி மித்தாய்’ படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாக உள்ளார். 

    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. இது தொடர்பாக தயாரிப்பாளர் ஜோசப் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: எடப்பள்ளியில் விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது என சொன்னவுடன் அங்கு செல்வது என்று முடிவு செய்தோம். அங்கு சென்றவுடன், படக்குழுவைச் சேர்ந்த பலரும் எங்கள் கதாசிரியர் ஜான் பாலிடம் சென்று பேசினார்கள். விஜய் சேதுபதி என்னிடம் வந்தார். நான் உடனே காரிலிருந்து இறங்கினேன். அவர் என்னை கட்டிப்பிடித்து வரவேற்றார்.



    பிறகு பக்கத்தில் சென்று அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த ஜானிடம் பேச ஆரம்பித்தார். அவர் பேசிய விதத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஒரு சிஷ்யன் தன் குருவுக்கு முன் பேசுவதைப் போல இருந்தது. விஜய் சேதுபதி மனித வடிவில் ஒரு தேவதை என லெனின் பாரதி சொன்னபோது நான் நம்பவில்லை. ஆனால், இன்று, குருத்து ஞாயிறன்று நான் ஒரு தேவதையைப் பார்த்தேன். இவ்வாறு ஜோசப் கூறியுள்ளார். #VijaySethupathi #MarconiMathai

    Next Story
    ×