search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சினிமா பைனான்சியர் போத்ராவின் உடல் தகனம் செய்யப்பட்டது
    X

    சினிமா பைனான்சியர் போத்ராவின் உடல் தகனம் செய்யப்பட்டது

    நேற்று மாரடைப்பால் மரணமடைந்த சினிமா பைனான்சியர் முகுல் சந்த் போத்ராவின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. #Bothra
    தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பைனான்ஸ் செய்தவர், முகுல் சந்த் போத்ரா. மயிலாடுதுறையைச் சேர்ந்த போத்ராவின் பூர்வீகத் தொழில் வைர வியாபாரம். சினிமா தயாரிப்பாளர்களுக்குக் கடன் கொடுக்கும் தொழிலில் இறங்கினார். பல சர்ச்சைகளுக்கு நடுவே இந்தத் தொழிலை செய்து வந்தார். 

    இவர் நேற்று மாலை மாரடைப்பால் காலமானர். அவருக்கு 60 வயது. இறுதிச்சடங்குகள் செய்து, இன்று மாலை 4.30 மணியளவில், ஜெயின் முறைப்படி சென்னையில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.



    போத்ராவுக்கு கரிஷ்மா, ககன் மற்றும் சந்தீப் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். தனக்கு வரவேண்டிய கடன் தொடர்பாக ரஜினி, கஸ்தூரிராஜா மற்றும் பலர் மீது நிறைய வழக்குகள் தொடுத்துள்ளார். போத்ரா மீதும் கந்துவட்டி தொடர்பான பல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. சில வழக்குகளுக்காகச் சிறையும் சென்றுள்ளார். 
    Next Story
    ×