search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பொள்ளாச்சி பாலியல் சம்பவம் - தமிழக மக்களின் உணர்வே என் உணர்வு: இளையராஜா
    X

    பொள்ளாச்சி பாலியல் சம்பவம் - தமிழக மக்களின் உணர்வே என் உணர்வு: இளையராஜா

    தமிழக மக்களின் உணர்வு எப்படி இருக்கிறதோ, அதோடு நானும் இருக்கிறேன் என்று பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து இளையராஜா கூறியிருக்கிறார். #Ilayaraja
    இசையமைப்பாளர் இளையராஜாவின் 75- வது பிறந்த நாள் நிகழ்ச்சி இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதற்காக அவர் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நேற்று அவர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

    இளையராஜா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாணவிகள் கேட்ட பாடலைப் பாடி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இளையராஜாவிடம் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.



    அதற்கு “தமிழக மக்களின் உணர்வு எப்படி இருக்கிறதோ, அதோடு நானும் இருக்கிறேன். தமிழ் நாட்டு மக்கள் இது போல் இன்னொன்று நடக்கக் கூடாது என்கிறார்கள். அது தான் எனது உணர்வும்“ என்றார்.
    Next Story
    ×