search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி
    X

    நீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி

    `பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss
    ரஜினி நடிப்பில் `பேட்ட’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் துவங்கவிருப்பதாக கூறப்படுக்கிறது. 

    சமீபத்தில் படத்தின் தலைப்பு குறித்து பரவிய வதந்திக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முற்றுப்புள்ளி வைத்த நிலையில், தற்போது படத்தில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. ரஜினி இதற்கு முன்பாக மூன்று முகம், பாண்டியன், கொடி பறக்குது உள்ளிட்ட படங்களில் போலீசாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



    2.0 படத்தை தொடர்ந்து, ரஜினி நடிக்கும் இந்த படத்தையும் லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதுதவிர சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமாரிடமும் ரஜினி கதை கேட்டுள்ளாராம். பேட்ட படத்திற்கு கிடைத்த வரவேற்பால், தனக்காக மற்றுமொரு கதையை தயார் செய்யும்படி கார்த்திக் சுப்புராஜிடம், ரஜினி கூறியுள்ளாராம். மேலும் ரஜினி - ராஜமவுலி கூட்டணியும் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss

    Next Story
    ×