search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
    X

    ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி

    ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியிருக்கிறார். #RRR #Samuthirakani
    ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி அடுத்ததாக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தை தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ என்று அழைக்கின்றனர். இரண்டு நாயகர்கள் மற்றும் ராஜமவுலியின் முதல் எழுத்தைச் சேர்த்து இப்படி அழைத்து வருகின்றனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    ராமாயண காவியத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், ராம் சரண் ராமனாகவும், ஜூனியர் என்.டி.ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், கீர்த்தி சுரேசிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது.



    இந்த படத்தில் ராம் சரணின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகி இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், சமுத்திரக்கனியும் படக்குழுவில் இணைந்திருக்கிறாராம். ராம் சரணின் மாமா கதாபாத்திரத்தில், அழுத்தமான வேடத்தில் சமுத்திரக்கனி நடிப்பதாக கூறப்படுகிறது. சில வாரங்களில் சமுத்திரக்கனி படக்குழுவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சமுத்திரக்கனி இதற்கு முன்பாக ரவி தேஜாவை வைத்து சம்போ சிவ சம்போ என்ற தெலுங்கு படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ஆர்ஆர் ரூ.300 கோடியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. #RRR #Samuthirakani

    Next Story
    ×