search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ராதாரவி என்னை மிரட்டினார் - சின்மயி
    X

    ராதாரவி என்னை மிரட்டினார் - சின்மயி

    ரெட்கார்டு போடுவேன் என்று டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி மிரட்டியதாக பாடகி சின்மயி புகார் கூறியுள்ளார். #Chinmayi #RadhaRavi
    கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயி டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்து வந்தார். பாலியல் புகார் கூறியதால் அவர் டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது தொடர்பாக இன்று சின்மயி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் மீ டூ தொடர்பாக குரல் கொடுக்கத் துவங்கியதால் தான் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். யார் எதிராக பேசினாலும் உடனே டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி அவர்களை நீக்கிவிடுவார். இது பல முறை நடந்துள்ளது. நான் 2006-ம் ஆண்டில் இருந்து டப்பிங் பேசி வருகிறேன்.

    தேர்தல் பற்றி எனக்கு தெரிவித்ததே இல்லை. ஒரு கண்டன பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் முன்பணம் வாங்கிய இசை நிகழ்ச்சி ஒன்றை ரத்து செய்து முன்பணத்தை திருப்பி தர வைத்தார் ராதாரவி.

    பேரணியில் கலந்து கொள்ளாவிட்டால் ரெட்கார்டு கொடுப்பேன் என்று மிரட்டினார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினர் போராட்டம் நடத்தியபோது வருகைப்பதிவேடு வைத்திருந்தனர்.

    அவர் அழைக்கும் போராட்டங்களுக்கு வராதவர்களுக்கு வேலை கிடையாது. இல்லை என்றால் அபிபுல்லா சாலையில் இருந்த டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு வரவழைத்து கண்டபடி திட்டுவார். ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் கேவலமாக திட்டுவார்.

    நான் ஒரு முறை அப்படி திட்டு வாங்கியபோது என் அம்மாவும் உடன் இருந்தார். சுசித்ராவும் திட்டு வாங்கியுள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதால் நானும், சுசித்ராவும் திட்டு வாங்கினோம். ஆனால் கூட்டம் நடப்பது குறித்து யாருமே எங்களிடம் தெரிவிக்கவில்லை.

    ஒட்டப்பாலத்தில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தார் ராதாரவி. நான் ராதாரவிக்கு போன் செய்து நிகழ்ச்சியை ஒப்புக் கொண்டது பற்றி தெரிவித்தது எனக்கு நினைவில் உள்ளது.

    அதற்கு அவரோ, எனக்கும் ஷூட்டிங் இருக்கு. நான் கேன்சல் பண்ணிட்டு வரல? நீ வரவில்லை என்றால் ரெட்கார்டு கொடுப்போம் என்றார். டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டால் அவர்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள். அதற்கு உதாரணம் பூமாராவ் என்ற பெண்’

    இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×