search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மிஸ் இந்தியா பட்டத்துக்காக படுக்கையை பகிர்ந்தார் - தனுஸ்ரீ மீது ராக்கி சாவந்த் புகார்
    X

    மிஸ் இந்தியா பட்டத்துக்காக படுக்கையை பகிர்ந்தார் - தனுஸ்ரீ மீது ராக்கி சாவந்த் புகார்

    ‘மிஸ் இந்தியா’ பட்டத்துக்காக நடிகை தனுஸ்ரீ படுக்கையை பகிர்ந்தார் என்று நடிகை ராக்கிசாவந்த் பரபரப்பு புகார் கூறியிருக்கிறார். #MeToo #Tanushree #RakhiSawant
    பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது முன்னாள் இந்திய அழகியும், நடிகையுமான தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது மீடூ இயக்கம் மூலம் வெளிவந்த முதல் குற்றச்சாட்டு ஆகும்.

    அதன்பிறகு மீடூ இயக்கத்தில் நடிகர்கள், டைரக்டர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த பாலியல் குற்றச்சாட்டின்போது நானாபடேகருக்கு ஆதரவாக நடிகை ராக்கி சாவந்த் செயல்பட்டார்.

    இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. தனுஸ்ரீ தத்தா பற்றி ராக்கி சாவந்த் அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து ராக்கி சாவந்த் கூறியதாவது:-

    தனுஸ்ரீ தத்தா 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் லெஸ்பியன் உறவு கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தனுஸ்ரீ ஆண்கள் மற்றும் பெண்களுடன் உறவு கொள்ளும் குணம் உள்ளவர். பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அனைவரும் தங்களின் மீடூ கதைகளுடன் விரைவில் வெளியே வருவார்கள்.



    நான் அப்படிப்பட்டவள் இல்லை. ஆனால் தனுஸ்ரீ தான் என்னை ஓரினச் சேர்க்கையாளராக மாற்றினார். நான் பெரிய ஆளாக வர மாட்டேன் என்று நினைத்து அவர் என்னை பயன்படுத்திக் கொண்டார். அவர் செய்ததை எல்லாம் நான் வெளியே சொல்ல மாட்டேன் என்று நினைத்து விட்டார். அவர் நினைத்தது தவறு.

    தனுஸ்ரீ தத்தா படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா அழகிப்பட்டத்தை வென்றார். தனுஸ்ரீயால் என் பெயர் கெடுகிறது. எனக்கு இந்தியாவில் நல்ல பெயர் உள்ளது.

    எனக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. இந்தியர்கள் என் மீது மதிப்பு வைத்துள்ளனர். ஆனால் தனுஸ்ரீ என் இமேஜை டேமேஜ் செய்கிறார். அவர் அமெரிக்காவில் இருந்து போலியான மீடூ இயக்கத்தை கொண்டு வந்து என் இமேஜை கெடுக்கிறார். அவருக்கு இந்தியாவை பிடிக்காது. அமெரிக்கா தான் பிடிக்கும்.

    தனுஸ்ரீ தத்தா நன்றாக சாப்பிட்டு குண்டாகி அசிங்கமாக உடலுடன் இருக்கிறார். அவருக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அவரிடம் பணம் இல்லாததால் அனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×