search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
    X

    சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு

    விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் கதை விவகாரத்தில் நடிகர் பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு மன்னிப்பு கேட்டுள்ளார். #Sarkar #Shanthnu
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் சர்கார். வரும் 6-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் கதைத் திருட்டு புகார் தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின.

    நேற்று ஐகோர்ட்டில் இந்த விவகாரம் சுமூகமாக முடிக்கப்பட்டது. இந்த பிரச்சினையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவரான இயக்குனர் கே.பாக்யராஜ் சில பேட்டிகள் மற்றும் அறிக்கைகளில் சர்கார் படத்தின் கதையை கூறி விளக்கியிருந்தார்.

    படம் வெளியாகும் முன்னர் இப்படியாக கதையைக் கூறியதால் பலர் அதிருப்தியடைந்தனர். முக்கியமாக விஜய் ரசிகர்கள் பாக்யராஜை கடுமையாக விமர்சித்தனர்.



    இந்நிலையில் பாக்யராஜின் மகன் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் இல்லை. என்றைக்கும் விஜய் அண்ணா, எனக்கு விஜய் அண்ணா தான்.

    தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டதால் கதையை அப்பா கூறினார். அதனால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தீபாவளியை கொண்டாடுவோம். சர்காரை கொண்டாடுவோம்.” என்று கூறியுள்ளார். சாந்தனு விஜய்யின் தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×