என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மீ டூ விவகாரம் - பாலியலுக்கு பெண்ணை அழைப்பதில் தவறில்லை: மாரிமுத்து
Byமாலை மலர்30 Oct 2018 11:11 AM GMT (Updated: 30 Oct 2018 11:11 AM GMT)
மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், பாலியலுக்கு பெண்ணை அழைப்பதில் தவறில்லை என்று நடிகர் மாரிமுத்து கூறியுள்ளார். #Marimuthu #MeToo
‘பரியேறும் பெருமாள்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் ‘மீ டூ’ விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக பேட்டி ஒன்று அளித்துள்ளார். இந்த பேட்டி பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒரு பெண்ணை அறைக்கு வா என்று கூப்பிட்டு இருக்கிறார். ஆண் தானே அவர். இதில் என்ன தப்பு இருக்கிறது?. கூப்பிடட்டும். உனக்கு விருப்பம் இருந்தால் போ, இல்லை என்றால் பத்திரிகையிடம் சொல்கிறார், சொல்லிவிட்டு போ. ஒரு ஆண் தானே அவர்.
அவருக்கும் ஆர்மோன்ஸ் இருக்கிறதல்லவா? ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து படுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் அல்லவா?. அதனால் தான் கூப்பிட்டு இருக்கிறார். அந்த பெண் வெளியே சொல்லியிருக்கிறாள். இதை கவிஞர் தாங்கி தான் ஆக வேண்டும். அதன் உண்மை நிலையை தேடி நான் போக விரும்பவில்லை. இன்னும் 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் கழித்து அது மறந்துவிடும். வேறு பிரச்சினை வந்துவிடும்.
இந்த விஷயத்தை மறந்துவிட்டு வேறு பிரச்சினை குறித்து பேச ஆரம்பித்துவிடுவோம். இதனால் கவிஞருக்கு இழுக்கு என்று நான் சொல்லவே மாட்டேன். ஒரு பெண்ணை தானே அறைக்கு வா என்று கூப்பிட்டார்?. ஒரு ஆம்பளையை கூப்பிட்டால் தான் அசிங்கம்.
காரில் செல்லும்போது ஒரு நாய் குறுக்கே வருகிறது. டக்கென்று பிரேக் போடும்போது பின்னால் வந்த சைக்கிள் காரன் இடித்து விட்டான். அவனுக்கு ஒரு சாரி சொல்லிவிட்டு நாய்க்கு ஒரு சாரி சொல்லிவிட்டு செல்வது போன்று தான் இந்த சம்பவம். இது ஒரு சின்ன தடுமாற்றம், அவ்வளவு தான்.
இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.
அவரது பேச்சு திரை உலகில் பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மாரிமுத்துவை நடிகர் சங்கத்தில் இருந்தே நீக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
I wish this small-minded, disappointing man #Marimuthu was not part of my favourite Tamil film of the decade. A classic about equality and change! Unfortunately he always will be. This interview hurt me and so many others so much. Sad! Paavam yen #Karuppi. @Mari_selvaraj@beemjihttps://t.co/XxyYpMQiR2
— Siddharth (@Actor_Siddharth) October 30, 2018
மாரிமுத்துவின் பேச்சு தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது ’இந்த அசிங்கம் புடிச்சவர் பரியேறும் பெருமாள்ல கெட்டவனா நல்லா நடிச்சார்னு நினைச்சேன். அவனே தானா நீ? சீ...” என்று பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X