search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாராட்டவே சென்றேன், அவர் பதறிவிட்டார் - அமலாபால்
    X

    பாராட்டவே சென்றேன், அவர் பதறிவிட்டார் - அமலாபால்

    ராம்குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படப்பிடிப்பு முடிந்த பிறகு இயக்குநரை பாராட்ட சென்றேன், ஆனால் அவரோ பதறி அங்கிருந்து சென்றுவிட்டதாக அமலாபால் கூறினார். #Ratsasan #AmalaPaul
    ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் நடிகை அமலாபால் பேசியதாவது,

    படம் ரிலீசாகும் போது கடுமையான போட்டி இருந்தது. படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. ராட்சசன் படத்தில் எனக்கு ஒரு அழகான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. ராம் ஒரு எளிஜிபில் பேச்சிலர். யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு கல்யாணம் பண்ணியிருந்தால் நடந்திருக்கும் என்று ராமிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். இந்த படத்துக்கு அப்புறம் எல்லாரும் கொஞ்சம் டென்சன் ஆயிருவாங்க, இந்த படத்தின் படப்பிடிப்பில் அனைவருமே கஷ்டப்பட்டோம். படப்பிடிப்பு முடிந்த உடனே ராமுக்கு நன்றி தெரிவித்து அவரை அரவணைத்து பாராட்ட சென்றேன். ஆனால் அவரோ பதறியடித்து ஓடியேவிட்டார். ரொம்ப சிறந்த மனிதர்.



    நிறைய நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த படத்தில் நான் நடிக்க முக்கிய காரணமான விஷ்ணுவுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் நான் இந்த படத்தில் நடித்திருக்க முடியாது.

    மீடூ பற்றி முதலில் ட்வீட் செய்தது நான் தான். எல்லாருக்கும் தெரியும், இந்த ஆண்டு பிப்ரவரியில் எனக்கு ஒரு பாலியல் தொல்லை வந்தபோதே நான் சொல்லியிருந்தேன். எனக்கு ஒரு தொல்லை வரும் போது அது பற்றி நான் பேசிவிட்டேன். இது மூடிவைக்கக்கூடிய விஷயம் அல்ல, இந்த மாதிரியான தொல்லைகள் நிறைய இருக்கிறது. சினிமாவில் மட்டும் இல்லை, மற்ற பல துறைகளிலும் இருக்கிறது. #Ratsasan #AmalaPaul

    Next Story
    ×