search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நீங்கள் சொன்னதற்கு எதிர்மறையாக நடக்கிறது - வங்கி மோசடிகள் குறித்து சித்தார்த்
    X

    நீங்கள் சொன்னதற்கு எதிர்மறையாக நடக்கிறது - வங்கி மோசடிகள் குறித்து சித்தார்த்

    வங்கியில் கடன் பெற்றுக் கொண்டு திருப்பி செலுத்தாமல் ஊரை விட்டு சென்ற குஜராத் தொழில் அதிபர் பற்றி சித்தார்த் கருத்து தெரிவித்திருக்கிறார். #Siddharth
    இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று அவற்றை திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு ஓடினார். சமீபத்தில் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடியும் பஞ்சாப் வங்கியில் பெற்ற ரூ.12 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார். மெகுல் சோக்சியும் வங்கி கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு ஓடியுள்ளார்.

    இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் சந்தேசராவும் இப்போது வெளிநாட்டுக்கு தப்பி ஓடி இருக்கிறார். இவர் பல்வேறு வங்கிகளில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளார். வங்கி கடன் பெறுவதற்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் 300–க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களையும் பினாமி பெயரில் உள்ள நிறுவனங்களையும் பயன்படுத்தி உள்ளார்.

    இவர் நைஜீரியாவுக்கு சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த மோசடியை நடிகர் சித்தார்த் கண்டித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர், ‘‘இன்னொரு குஜராத்தி சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். நீங்கள் கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதாகத்தானே சொன்னீர்கள். ஆனால் இப்போது அதற்கு எதிர்மறையாக நடந்து வருகிறது. இங்கு சாதாரண இந்திய குடிமகனின் பண மதிப்பு நீக்கம் செய்யப்படுகிறது’’ என்று கூறியுள்ளார். 

    நிரவ் மோடியும் குஜராத்காரர் என்பதால் சித்தார்த் இன்னொரு குஜராத்தி என்று நிதின் சந்தேசராவை டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.
    Next Story
    ×