search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
    X

    மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு

    மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு, அஜித் கையில்தான் இருக்கிறது என்று வெங்கட் பிரபு கூறியிருக்கிறார். #Mankatha2 #Ajith
    மங்காத்தா வெளியாகி 7-வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. அதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட இயக்குநர் வெங்கட்பிரபு, “ரசிகர்களுக்கு மங்காத்தா தின வாழ்த்துகள். நீங்கள் என்ன கேட்கப்போகிறீர்கள் எனத் தெரியும்.

    அதற்கு முன்பாக நானே அதை சொல்லிவிடுகிறேன். நீங்கள் கேட்பதற்கான பதில் அஜித்திடம்தான் இருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.. வெங்கட் பிரபுவிடம் மங்காத்தா 2 எப்போது இயக்கப் போகிறீர்கள் என்றுதான் வழக்கமாகக் கேட்கப்படும்.



    எனவே அதை மனதில் வைத்துதான் இப்படியான பதிலை வெங்கட் பிரபு சொல்லியிருக்கக் கூடும் எனத் தெரிகிறது. எனவே மங்காத்தா படத்தின் அடுத்த பாகம் தயாராகுமா இல்லையா எனும் வி‌ஷயம் அஜித்தின் பதிலில்தான் இருக்கிறது என்றே இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
    Next Story
    ×