என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கேரள வெள்ள நிவாரணத்துக்கு பார்த்திபன் உதவி
Byமாலை மலர்26 Aug 2018 10:03 AM GMT (Updated: 26 Aug 2018 10:03 AM GMT)
தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு அரிசி மற்றும் மருந்து பொருட்களை நடிகர் பார்த்திபன் அனுப்பி வைத்துள்ளார். #Kerala #KeralaFlood
கேரளாவில் பெய்த தொடர் மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதிலும் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து உதவிகள் கிடைத்து வருகின்றன. தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் தங்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
நடிகர் பார்த்திபன் தனது ஆர்.பார்த்திபன் மனிதநேய மன்றம் சார்பாக 1250 கிலோ அரிசி மற்றும் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகளை நிவாரணமாக அனுப்பி வைத்துள்ளார்.
‘கேரளாவில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் அமலாபால் என்னை தொடர்பு கொண்டு நிவாரண பொருட்களை சேகரித்து தருமாறு வேண்டினார். நான் என்னுடைய மன்றம் சார்பிலேயே வழங்கி இருக்கிறேன். என் படமான கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் லாபத்தில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவது தான் இந்த மன்றம்.
நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் வாகனத்தில் கொண்டு செல்லும் போது யார் அனுப்புவது என்று இல்லாமல் இருந்தால் தேவையில்லாத பாதுகாப்பு பிரச்சினைகள் வரும் என்று டிரைவர் பயந்தார். எனவே தான் இது முழுக்க முழுக்க என் பொறுப்பில் அளிக்கப்படும் நிவாரண பொருட்கள் என்று அதில் பெயர் எழுத வேண்டியதாகி விட்டது. என் கையெழுத்தும் அவசியம் என்று கேட்டார்கள். எனவே இது வெளியில் தெரிந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X