search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கேரள மக்களுக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.10 லட்சம் நிதியுதவி
    X

    கேரள மக்களுக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.10 லட்சம் நிதியுதவி

    தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #ARMurugadoss
    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

    முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய்சேதுபதி, உதயநிதி, சிவகார்த்திகேயன், விக்ரம், இயக்குனர் சங்கர், நடிகை ரோஹினி, நயன்தாரா உள்ளிட்டோர் கேரளாவுக்கு நிதி உதவி அளித்துள்ளனர். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #ARMurugadoss
    Next Story
    ×