search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சபாஷ் நாயுடு படத்தின் டைட்டிலில் சாதிப்பெயர் - கமல் விளக்கம்
    X

    சபாஷ் நாயுடு படத்தின் டைட்டிலில் சாதிப்பெயர் - கமல் விளக்கம்

    சாதியில்லாமல் என் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தேன் என்று கமல்ஹாசன் கூறியிந்த நிலையில், அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் டைட்டிலில் சாதிப்பெயர் இருப்பது குறித்து கமல் விளக்கியுள்ளார். #KamalHaasan
    நடிகர் கமல்ஹாசன் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கேள்வி ‘விஸ்வரூபம்’ வெளியீட்டின்போது படத்தை ‘டிடிஎச்’சில் வெளியிடுவேன் என்றீர்கள். அதற்கு எதிர்ப்புகள் வந்தன. அந்தப் பிரச்னைகளின் நினைவுகள் இப்பவும் துரத்துகிறதா?

    பதில் இப்போது முன்னைவிடத் தெம்பாகவும் புரிந்தநிலையிலும் இருக்கிறேன். அது அரசியல் இடையூறுதான். யாரோ செய்யும் தொழிலில் நான் புகுந்துவிட்டதாக நினைத்து விட்டார்கள். நியாயமான வருமானம் வேண்டுமென்றால் தியேட்டர்களின் எண்ணிக்கை கூடவேண்டும். ஆந்திராவில் எல்லாம் அப்படித்தான். ஆனால் கள்ள மார்க்கெட் அது இது என்று சலவை செய்யும் இடமாகத் தமிழ் சினிமா இருப்பதை நான் விரும்பவில்லை.

    கேள்வி:- உங்கள் தொலை நோக்குப் பார்வையை உங்கள் துறைசார்ந்தவர்களே புரிந்துகொள்ளாதபோது எப்படி உணர்வீர்கள்?”

    பதில்:- மாற்றங்கள் மெதுவாகத்தான் நடக்கும். எதிரில் இருப்பவனை மனிதனாகப் பார்க்காமல் இரையாகப் பார்த்த காலம் மாற எத்தனை லட்சம் வருடங்கள் கடந்தன? ‘சாதிகள் இல்லையடி பாப்பா’னு சொல்ல நன்றாக இருக்கிறது. ஆனால் மாற்ற முயற்சி பண்ணினால் ‘உங்க வீட்ல என்ன பண்றீங்க?’னு கேட்கிறார்கள். நான் எதற்கும் முன்னுதாரணமா இருக்கிறதைத்தான் விரும்புகிறேன். நீ பண்ணுனு சொல்ல மாட்டேன். நான் பண்றேன்னு பண்ணிக்காட்டுவேன். எல்லாரும் அதைப் புரிஞ்சு கூடவர தாமதம் ஆகத்தான் செய்யும்.”



    கே:- ரசிகர்கள் சினிமாவையும் அரசியலாகப் பார்ப்பது குறித்து?

    ப:- அண்ணாவின் ‘வேலைக்காரி’யில இருந்து, கலைஞரின் ‘பராசக்தி’யில இருந்து அப்படித்தானே. இப்போது இன்னும் அதிகமாகியிருக்கு. அது எனக்குப் பிடித்திருக்கிறது. எல்லாரும் கேள்வி கேட்கறாங்க. இந்த ‘எல்லாரும் விழித் திருத்தல்’தான் நான் எதிர்பார்த்தது.

    கே:- விஸ்வரூபம் 2 டிரெய்லர்ல தமிழ்ல வசனம் மாற்றியது எதிர்ப்புகளைத் தவிர்க்கவா?

    ப:- அப்படியெல்லாம் இல்லை. படம் பார்த்தா உங்களுக்குப் புரியும். தவிரவும் நம்ம வாக்கியத்தொடர் வேற. இந்தியில் வேற. அதுக்காகச் சில வசனங்கள் மாறலாம். அதுபோக டிரெய்லர்ல மிகக்குறைந்த நேரம்தானே. அதையெல்லாம் பெரிசு படுத்துவாங்கனு நினைக்கவில்லை. சோஷியல் மீடியா காலமில்லையா; அதான் சர்ச்சை ஆயிடுச்சு. ஆனால், நான் இதைவிட காட்டமாக அரசியல் பேசியிருக்கிறேன்; எழுதியும் இருக்கிறேன்.



    கே:- சபாஷ் நாயுடு எந்த நிலையில் இருக்கு? ‘சாதியில்லாமல் என் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தேன்’ என்று சொல்லும் உங்கள் படத்தின் டைட்டிலில் சாதிப்பெயர் இருக்கே?”

    ப:- 40 சதவீதம் முடிஞ்சது. டைட்டிலை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எம்.ஆர்.ராதா சாதிக்கெதிரா அத்தனை பேசினவர். ஆனால் சாதிப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு தான் வசனமே வைப்பார். பேர் வெச்சதாலேயே அதைக் கொண்டாடறதா அர்த்தமில்லை.

    கே:- உங்க அரசியல் வருகை எப்படி திடீர்னு நடந்தது?”

    ப:- எனக்கு சினிமா தான் எல்லாம்னு நினைச்சுட்டிருந்தேன். நான் சினிமாவில் நினைச்சதெல்லாம் செய்ய முடியலைங்கறது உண்மை. ஏன்னு யோசிச்சேன். அஸ்திவாரமே சரியா போடாம, சிகையலங்காரம் பண்ணிட்டிருக்கோம்னு தோணிச்சு. நான் அரசியலுக்கு வர்றது ‘ஹேராம்’லயே ஆரம்பிச்சது. ஆபத்து வருது, ஆபத்து வருதுன்னு ஒரு கட்டியம் கூறுதல் அதுல நடந்திருக்கும். அதுதான் இப்ப நடந்துட்டிருக்கு. நாடெங்கிலும் ஸ்ரீராம் அய்யங்கர்கள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் எத்தனையோ சாகேத்ராம்கள் விழுந்து கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #KamalHaasan #Vishwaroopam2 #SabashNaidu

    Next Story
    ×