search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரன்வீர்சிங் - தீபிகா படுகோனேவுக்கு நவம்பரில் திருமணம்
    X

    ரன்வீர்சிங் - தீபிகா படுகோனேவுக்கு நவம்பரில் திருமணம்

    பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகன், நாயகியாக வலம் வரும் ரன்வீர்சிங் - தீபிகா படுகோனே திருமணம் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #DeepikaPadukone #RanveerSingh
    தமிழில் ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த தீபிகா படுகோனே இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியா ‘பத்மாவத்’ படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் ராணி பத்மாவதி வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக எதிர்ப்புகளையும், கொலை மிரட்டல்களையும் சந்தித்தார்.

    இதே படத்தில் வில்லனாக நடித்த ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தீபிகா படுகோனே - ரன்வீர்சிங் திருமண ஏற்பாடுகள் துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ரன்வீர்சிங் சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா தூதுவராக இருக்கிறார். எனவே அங்குள்ள அரசாங்கம் அந்த நாட்டுக்கு வந்து திருமணம் செய்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தது. ஆனால் தீபிகா படுகோனேவுக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை. இத்தாலியில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.



    நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இத்தாலியில்தான் திருமணம் நடந்தது. இத்தாலி அரசும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்திருக்கிறது.

    தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் எப்போது நடக்கும் என்று பாலிவுட்டில் ஒரு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

    இந்த நிலையில் இருவருக்கும் வருகிற நவம்பர் 19-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரன்வீர்சிங் கூறும்போது ‘எனது திருமணம் இந்த வருடம் நடக்கும்’ என்றார். #DeepikaPadukone #RanveerSingh

    Next Story
    ×