search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஜருகண்டி - லோன் வாங்கி கஷ்டப்படும் ஜெய்
    X

    ஜருகண்டி - லோன் வாங்கி கஷ்டப்படும் ஜெய்

    நிதின் சத்யா தயாரிப்பில் பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜருகண்டி படத்தில் லோன் வாங்கி கஷ்டப்படும் கதாபாத்திரத்தில் ஜெய் நடித்துள்ளதாக தெரிகிறது. #Jarugandi #Jai
    வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜருகண்டி. ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நிதின் சத்யா பேசுகையில், 

    பிச்சுமணியை சென்னை 28 படத்தில் இருந்தே தெரியும். மங்காத்தா, சரோஜா என பல படங்களில் அவரது வேலை பிடித்துப் போனது. படத்தை சரியாக 46 நாட்களில் முடித்துவிட்டோம். ஜெய் உட்பட அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படத்தை விரைவில் சென்சாருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். சிங்கம்-3 படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்றார்.



    படத்தின் இயக்குநர் பிச்சுமணி பேசியதாவது, 

    வேறு கதைக்கு வைத்த தலைப்பை, இந்த படத்திற்கு வைக்க சொல்லி உற்சாகப்படுத்தினார் வெங்கட்பிரபு. அனைவருமே படத்தில் விரும்பி நடித்தார்கள். போபோசிஸ் இசையில், பிரவீண்.கே.எல் படத்தொகுப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் திரைக்கதை வேகமாக நகரும் வகையில் இருக்கும். வேகம், ரன், ஸ்பீடு என பல பெயர்கள் வந்துவிட்டது. அடுத்ததாக ஜருகண்டி வரப்போகிறது. 

    நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி படத்தை படம் படத்தின் கதை நகரும் என்றார். #Jarugandi #Jai

    Next Story
    ×