search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தும் சாய் பல்லவி
    X

    தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தும் சாய் பல்லவி

    மலையாள படம் மூலம் பிரபலமான சாய் பல்லவி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். #Saipallavi
    தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அடுத்தடுத்து படங்களை ஒப்பந்தம் செய்து வருகிறார் சாய் பல்லவி. இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படம் தியா. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. 

    தமிழ் நாட்டைச் சேர்ந்த சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாக களி படத்தில் நடித்தார். தெலுங்கிலும் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த அவர் தமிழ்ப்படங்கள் பக்கம் எப்போது வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்று வருடங்களுக்குப் பின் தியா மூலம் வந்தார். 

    அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். தனுஷ் நடிக்கும் மாரி 2, சூர்யா நடிக்கும் என்ஜிகே ஆகிய படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஹனு ராகவபுடி இயக்கத்தில் ‘படி படி லெச்சி மனசு’ படத்தில் நடித்துவரும் அவர் மற்றொரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். 



    அறிமுக இயக்குனர் வேணு உடுகுலா இயக்கும் புதிய படம் ‘நீடி நடி ஒக்க கதா’ என்ற படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளார். திரைக்கதை அவருக்கு பிடித்துப்போக உடனே நடிக்க சம்மதித்துள்ளார். முழுக்க பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த படத்தின் கதாநாயகன் யார் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
    Next Story
    ×