என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அரசியலுக்கு வருவது பற்றி மனம்திறந்த விஜய் சேதுபதி
Byமாலை மலர்31 May 2018 9:09 AM GMT (Updated: 31 May 2018 9:09 AM GMT)
சினிமாவில் இருந்து பலரும் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில், அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு நடிகர் விஜய் சேதுபதி பதில் அளித்திருக்கிறார். #VijaySethupathi
தூத்துக்குடி சம்பவம் மட்டும் இல்லை மக்கள் போராட்டங்களுக்கு எல்லாம் தனது குரலை உறுதியாக தருபவர் நடிகர் விஜய் சேதுபதி. அவரிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டதற்கு ‘நான் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன். காரணம் எனக்கு மக்கள் மீது அக்கறை இருக்கும் அளவுக்கு அரசியல் அறிவு கிடையாது. அதற்கான சிந்தனையும்கூட எனக்கு இல்லை.
அந்த அறிவு, சிந்தனை இல்லாமல் அந்த இடத்தில் போய் உட்காரக்கூடாது. ‘இங்கே நடப்பது சரி’ என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். சிலர் ‘தவறு’ என்று சொல்கிறார்கள். எனவே தெளிவான முடிவை நம்மால் எடுக்க முடியவில்லை.
ஆனால் இப்போது இருக்கும் இளைஞர்கள் அப்படி இல்லை. நிறைய தெளிவோடு செயல்படுகிறார்கள். அரசியல் அறிவோடு இயங்குகிறார்கள். அவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும்’ என்று பதில் அளித்து இருக்கிறார். #VijaySethupathi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X