search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சினிமா இயக்குனர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சினிமா இயக்குனர்கள் ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னையில், தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சினிமா இயக்குனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பொது மக்களின் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதற்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.



    இதில் இயக்குனர்கள் பா.இரஞ்சித், பாலாஜி சக்திவேல், ராஜீவ் முருகன், சீனுராமசாமி, சசி, ராம், நவீன் குமாரசாமி, எஸ்.பி.ஜனநாதன், பாண்டிராஜ், நவீன், கமல் கண்ணன் ஆகியோரும், நடிகர் அரவிந்த் ஆகாஷ், பாடலாசிரியர் உமாதேவி, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் துப்பாக்கி சூட்டை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×