search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நீ என்ன பெரிய துப்பறிவாளனா? விஷாலுக்கு டி.ராஜேந்தர் கேள்வி
    X

    நீ என்ன பெரிய துப்பறிவாளனா? விஷாலுக்கு டி.ராஜேந்தர் கேள்வி

    துப்பறிவாளன் படத்தில் நடித்து விட்டால் நீ என்ன பெரிய துப்பறிவாளனா என்று நடிகர் விஷாலுக்கு இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். #Vishal #TRajendar
    விஷால் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘இரும்புத்திரை’. மித்ரன் இயக்கியுள்ள இப்படம் டிஜிட்டல் இந்தியாவில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இப்படம் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

    இந்நிலையில், வாக்குறுதிகளை மீறி விஷால் செயல்பட்டு விட்டதாக கூறி இயக்குனர் பாரதிராஜா, ராதாரவி, டி.ராஜேந்தர் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் பேட்டியளித்தனர்.

    இதில் டி.ராஜேந்தர் பேசும்போது, ‘தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் போட்டியிடவில்லை. துப்பறிவாளன் படத்தில் நடித்தால் நீ என்ன பெரிய துப்பறிவாளனா? தமிழ் ராக்கர்சை பிடித்து விட்டேன். நெருங்கி விட்டேன் என்றெல்லாம் கூறினார். எங்கே போனார்கள் தமிழ் ராக்கர்ஸ். ஏன் இன்னும் சொல்ல வில்லை. எங்கே போனது ரூ.7 கோடி வைப்புநிதி? பதில் சொல்ல முடியுமா? பொதுக்குழுவை நடத்த முடியாதபோது, ஸ்டிரைக் நடத்தியது ஏன்? ஒரு படத்திற்கு 200 திரையரங்குகள் தான் ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி கூறிவிட்டு, அவருடைய ‘இரும்புத்திரை’ படத்தை மட்டும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டிருக்கிறார். 

    க்யூப் கட்டணம் குறைப்பதற்காக விஷால் ஸ்டிரைக் நடித்தினார். ஆனால், க்யூப் கட்டணம் குறைந்ததா? மூத்த உறுப்பினர்கள் பிரிந்து கிடப்பதால் யார் யாரோ பதவிக்கு வருகிறார்கள். இந்தநிலை மாற வேண்டும்’ என்றார்.
    Next Story
    ×