search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்கிறார் - பிரகாஷ்ராஜ்
    X

    பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்கிறார் - பிரகாஷ்ராஜ்

    கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்து வருகிறார் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார். #PrakashRaj #Modi #PM
    நடிகர் பிரகாஷ்ராஜ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    கேள்வி:- பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோள் எதனால் வந்தது?

    பதில்:- என் வாழ்க்கையில் இந்தியாவின் சரித்திரத்தில் இப்படி பொய் சொல்கிற பிரதமரை நான் பார்த்ததே கிடையாது. அவருக்கு எதுவுமே தெரியாது. பொய் சொல்லிக்கிட்டே போய்க் கொண்டிருக்கிறார். அந்த பொய்களுக்கு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறோம். நான் ஒரு குடிமகன்.

    எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நான் ஒரு கலைஞன், சமுதாயத்தில் இருந்து வளர்ந்தவன். கட்சியில் இருந்து வளர்ந்தவன் கிடையாது. எங்கேயோ ஒரு இடத்தில் நமது நாட்டுக்கு நடந்து கொண்டிருக்கிற துரோகம், பொய் பிரசாரம் போன்றவை பற்றி கேள்வி கேட்க வேண்டும்.

    நான் கேள்விதான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் பிரதமராக இருக்கிறீர்கள். உங்கள் கட்சி ஆட்சியில் இருக்கிறது. நீங்கள் சொன்னது என்ன ஆச்சு. நீங்க கொடுத்த வாக்கு என்ன? அதை நிறைவேற்றினீர்களா? இல்லையா? என்று கேள்வி கேட்டால் எதிர்கேள்விதான் கேட்கிறார்களே தவிர பதில் இல்லை.

    உங்க அம்மாவோட ஜாதி என்ன? நீ எதற்கு நடிகனாக பேசுகிறாய் என்கிறார்கள். என்னிடம் ஓட்டு கேட்டு வரும் போது நடிகனாக தெரியவில்லை. ஒரு குடிமகனாக தெரிகிறோம். கேள்வி கேட்டால் எல்லோருடைய வாயையும் ஏன் மூடுகிறீர்கள்.



    நான் இந்து மதத்துக்கு எதிராக இருக்கிறேன் என்று ஏன் பிரசாரம் செய்கிறீர்கள்? நீ நாட்டோட துரோகி. நாட்டை விட்டு விட்டு பாகிஸ்தானுக்கு போ என்று ஏன் சொல்கிறீர்கள். இது தப்பா இருக்கிறது. இதை மக்களிடம் சொல்ல வேண்டி இருக்கிறது.

    இன்னும் எத்தனை நாள் தான் பொய் சொல்லிக் கொண்டே ஒரு நாட்டின் நிலைமையை அசிங்கமாக்கிக் கொண்டிருப்பீர்கள். அதனால் தான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

    கர்நாடக தேர்தலில் பா.ஜனதா பொய் பிரசாரம் செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×