search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நாடோடிகள்-2 கூட்டணியின் உழைப்பு அசாதாரணமானது - சமுத்திரக்கனி
    X

    நாடோடிகள்-2 கூட்டணியின் உழைப்பு அசாதாரணமானது - சமுத்திரக்கனி

    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகும் `நாடோடிகள்-2' படத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் பாடல் ஒன்றை படமாக்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #Naadodigal2 #Sasikumar
    இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

    இந்நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் படத்தின் இயக்குநர் சமுத்திரகனியும் நடிக்கிறார். 

    இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தேனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த முடிந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 



    பாடல் காட்சி ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கி உள்ளனர். முதல் பாகத்தை போலவே இதிலும் அனைவரையும் கவரக்கூடிய பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் பல காட்சிகள் இருக்கும். இந்த கூட்டணியின் உழைப்பு அசாதாரணமானது. எனவே வெற்றி குறித்து எந்த சந்தேகமும் இல்லை, வெல்வோம் என்று இயக்குநர் சமுத்திரக்கனி கூறியுள்ளார். 

    ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைய உள்ளது. #Naadodigal2 #Samuthirakani #Sasikumar 

    Next Story
    ×